ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணி தற்சமயம் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

அந்தவகையில் இத்தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது பயிற்சி ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அனிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணிக்கு அந்த முடிவு சரியானதாக அமையவில்லை. ஏனெனில் ஸ்காட்லாந்து அணி வீராங்கனைகளால் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். குறிப்பாக அந்த அணியில் அதிகபட்சமாக சாரா பிரைஸ் 26 ரன்களையும், ரேச்சர் 10 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இதனால் ஸ்காட்லாந்து மகளிர் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபோதனி, சச்சினி நிசன்சலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணியிலும் விஷ்மி குணரத்னே, கேப்டன் சமாரி அத்தபத்து, ஹர்ஷிதா சமரவிக்ரமா, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், 15.3 ஓவர்களில் இலக்கை அணி இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகலை இழந்து 140 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷொர்னா அக்தர் 28 ரன்களையும், சதி ரானி 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். பாகிஸ்தான் அணி தரப்பில் சதியா இக்பால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அந்த அணியில் அதிகபட்சமாக ஒமைமா சோஹைல் 33 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வங்கதேச மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News