நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி மிக எளிமையாக பாகிஸ்தான் அணியை வென்றது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரில் மேல் வரிசையில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 155 ரன்கள் எடுத்த பாகிஸ்தான், அங்கிருந்து மொத்தமாக சரிந்து 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Advertisement

இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த பாகிஸ்தான அணியால் இந்தியாவை எதுவுமே செய்ய முடியவில்லை. ரோஹித் சர்மாவின் அதிரடிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களிடம் எந்த பதிலும் இல்லை. இதன் காரணமாக இந்திய அணி மிக எளிமையாக வெற்றி பெற்றதோடு நல்ல ரன் ரேட்டை எடுத்துக் கொண்டு, பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டுக்கு பிரச்சினையை உண்டாக்கியது. 

Advertisement

அந்த குறிப்பிட்ட போட்டியை பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை மீண்டும் உடைத்து இருக்கிறது. அவர்கள் முதலிலிருந்து நம்பிக்கை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக பாகிஸ்தான் முன்னால் வீரர்கள் கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் பாகிஸ்தான் அணியின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதில் வாசிம் அக்ரம் மற்றும் சோயப் மாலிக் இருவரும் மிகக் கடுமையான விமர்சனங்களை தொடுத்தார்கள்.

குறிப்பாக சோயப் மாலிக் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வழி நடத்துவதற்கு தகுதியான நபர் கிடையாது என்று கூறியிருந்தார். மேலும் அவர் ஒரு கேப்டனாக எதையுமே ஆரம்ப நிலையில் இருந்து கற்றுக் கொள்ளவில்லை எனவே அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த குறிப்பிட்ட உரையாடலில் வாசிம் அக்ரமும் இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய முகமது யூசுஃப் கூறும் பொழுது “உலகக் கோப்பை நடந்து கொண்டிருக்கும் பொழுது இப்படி யாரும் அணி பற்றி பேசக்கூடாது என்று நினைக்கிறேன். இரண்டாவதாக இம்ரான் கான் 1983 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்தார். அவர் தன்னுடைய மூன்றாவது முயற்சியாக 1992 ஆம் ஆண்டில்தான் உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணிக்காக வென்றார். 

முதல் இரண்டு முயற்சியில் அவர் தோல்வியடைந்துதான் இருந்தார். எந்த ஒரு நல்ல வீரரும் கேப்டனாக தொடர அனுமதிக்க வேண்டும். பாபர் அசாம் நீண்டகாலமாக கேப்டனாக இருந்து வருகிறார். ஏனென்றால் அவருக்கு திறமை இருக்கிறது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருக்கு நெருக்கமாக இருந்து கேப்டனாக வரவில்லை. அவர் ஒரு உண்மையான கேப்டன்” என்று கடுமையாக மற்ற இருவரையும் சாடி இருக்கிறார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News