ஆசியக் கோப்பை 2022இன் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் ஓபனர்கள் குஷல் மெண்டிஸ் 0, நிஷங்கா 8  ஆகியோர் சொதப்பினர். மற்ற டாப் வரிசை வீரர்களும் சொதப்பியதால் இலங்கை அணி 58 எனத் திணறியது. அடுத்து ராஜபக்சா 71 காட்டடி அடித்து அசத்தினார். தொடர்ந்து ஹசரங்கா 36 ரன்களை சேர்த்ததால் இலங்கை அணி 20 ஓவர்களில் 170 ரன்களை எடுத்தது.

Advertisement

அதன்பின்இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர் முகமது ரிஸ்வான் 55 , இஃப்திகார் அகமது 32 ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். பாபர் அசாம் 5 உட்பட மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்ததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147 ரன்களை குவித்தது.

இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. இலங்கை தரப்பில் மதுஷன் 4 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 3 ஆகியோர் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்கள்.

இப்போட்டியில் தோற்ற பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ‘‘இலங்கை அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் 8 ஓவர்களின்போது நாங்கள் இலங்கை அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினோம். அடுத்து ராஜபக்சா, ஹசரங்கா பார்ட்னர்ஷிப் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. 

மேலும் 15-20 ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்துவிட்டோம். அதேபோல் பீல்டிங்கும் திருப்திகரமாக இல்லை. வெற்றி, தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம். டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது’’ என தெரிவித்தார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News