Pakistan vs sri lanka
பாபர் ஆசாம் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, இரண்டாவது சுற்றின் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் வலிமையாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரன்கள் தந்ததோடு, நசீம், ஹாரிஸ் என இரண்டு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் இந்த இருவர் இல்லாதது, பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. மேலும் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இந்தக் காரணங்களால் பரபரப்பான போட்டியில் கடைசி இரண்டு பந்தில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில், பாபர் அசாம் கேப்டனாக செய்திருந்த சில தவறுகளால், பாகிஸ்தான் அணி தோற்றது.