போட்டி முழுமையாக நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - கேன் வில்லியம்சன்!

Updated: Sat, Nov 04 2023 21:30 IST
போட்டி முழுமையாக நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - கேன் வில்லியம்சன்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்தை டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி 21 ரன்கள் பாகிஸ்தான் தோற்கடித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பாகிஸ்தானை அதிரடியாக எதிர்கொண்ட நியூசிலாந்து 50 ஓவர்களில் 401/6 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108, கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 402 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் சௌதீ வேகத்தில் அவுட்டானாலும் ஃபகர் ஸமான் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மழை வரும் என்பதால் வேகமாக விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட அவர் 63 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.

மறுபுறம் கேப்டன் பாபர் அசாம் தம்முடைய பங்கிற்கு 66 ரன்களும் ஃபகர் ஸமான் 126 ரன்களும் எடுத்ததால் 25.3 ஓவரில் பாகிஸ்தான் 200/1 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்து போட்டியை நிறுத்தியது. அப்போது நியூசிலாந்தை விட 21 முன்னிலை பெற்றதன் காரணமாக வென்ற பாகிஸ்தான் தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

அப்படி மழை வந்ததால் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து பின்னடடைவை சந்தித்து அரையிறுதிக்கு செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 401 ரன்கள் அடித்து முதல் பகுதியில் அசத்திய தங்களுடைய வெற்றியை 2ஆவது பகுதியில் மழை வந்த கெடுத்ததாக கேன் வில்லியம்சன் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

இதுகுறித்து பேசிய அவர்,“முதல் பகுதி நன்றாக இருந்தது. ஆனால் அதன் பின் வானிலை தன்னுடைய பங்காற்றியது. அதற்காக பாகிஸ்தானின் ஆட்டத்தை மறுக்க முடியாது. ஜமானுக்கு இந்த மைதானம் பெரியதாக இல்லை. பாகிஸ்தான் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டார்கள். ஓவர்கள் குறைக்கப்பட்டது இரு அணிக்கும் வெற்றியை நெருங்கிக் கொண்டு வந்தது. ஒருவேளை 50 ஓவர்கள் ஆட்டம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

இருப்பினும் மைதானத்தின் சிறிய பவுண்டரி அளவை தடுப்பது கடினமாக இருந்தது. இந்த வெற்றிக்கான முழு பாராட்டுக்களும் பாகிஸ்தானை சேரும். எங்களுடைய பவுலர்கள் கடினமான சூழ்நிலையை சந்தித்தனர். ரச்சின் அழகாக விளையாடினார். எதிரணி இடது வலது கை பேட்ஸ்மேன்களுடன் விளையாடும் போது நீங்கள் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்திருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் அதை நாங்கள் செய்ய முடியவில்லை” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை