சச்சினை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கரோனா!

Updated: Sat, Mar 27 2021 23:07 IST
Yusuf Pathan (Image Source: Google)

இந்தியாவில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கரோனாவால்
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில்,
எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எங்கள் குடும்பத்தில் மற்ற யாருக்கும் கரோனா
தொற்று இல்லை. இப்போது மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி நான் என்னை
தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்"என்று கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ராய்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றிருந்தார். சச்சினை தொடர்ந்து இந்தியா லெஜண்ட்
அணியில் விளையாடிய முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும்  கரோனா பாதிப்பு
உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரில்
பங்கேற்ற மற்ற வீரர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை