‘சேட்டை புடிச்ச பையன் சார் இவன்’ - நடுவர்களிடம் சேட்டை செய்த சஹால்!

Updated: Sun, Oct 30 2022 21:26 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்களை மட்டுமே குவித்தது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித், கேஎல் ராகுல், விராட் கோலி, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து விக்கெட்டாகி ஏமாற்றினார். தனி ஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசினார். இவரின் இந்த அதிரடி ஆட்டம் இந்தியாவை 133 ரன்கள் வரை கொண்டு சென்றது.

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடியான அரைசத்தின் மூலம், 19.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்த ஆட்டம் முழுவதும் இந்திய ரசிகர்கள் மிகவும் சீரியஸாக இருந்த சூழலில் அவர்களுக்கு ஏற்ற சிரிப்பு விருந்தை வழங்கினார் யுவேந்திர சாஹல். ஆட்டத்தின் தொடக்கத்தில் பார்னல் வீசிய பந்து கே.எல்.ராகுலின் உயிர் நாடி அருகில் பட்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் களத்திலேயே மண்டியிட்டு தவித்துக்கொண்டிருந்தார். அப்போது பிசியோதெரபிஸ்ட்கள் உள்ளே வந்து சிகிச்சை அளித்தனர்.

அப்போது வீரர்களுக்கு குடிநீர் கொடுக்க வந்த யுஸ்வேந்திர சாஹல், கள நடுவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கே.எல்.ராகுலுக்கு பட்டதை போலவே உங்களுக்கும் அடி விழ வைக்கிறேன் எனக்கூறி அம்பயரின் உயிர் நாடியை பார்த்து உதைக்க நினைத்தார். இது போதாது என்று நினைத்து கையை வைத்தும் குத்த நினைத்தார்.

 

வேடிக்கையாக நடந்த இந்த சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. களத்திற்கு வெளியே இருந்து குசும்பு தனங்களை செய்துக்கொண்டிருந்த யுவேந்திர சஹால் தற்போது நடுவர்களையும் வம்பிழுத்து வருகிறார் எனக்கூறி ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை