ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. 

Advertisement

இதில் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 31ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி இம்முறையும் பேட்டிங் செய்வதாகவே அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு சகாப்வா - கிரேக் எர்வின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 17 ரன்களில் சகாப்வா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெஸ்லி மதவெரே, சிக்கந்தர் ரஸா, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

இதைடடுத்து மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கிரேக் எர்வினும் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த மில்டன் ஷும்பா 4 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் பர்ல் - லுக் ஜொங்வா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிலும் நசும் அஹ்மத் வீசிய 15ஆவது ஓவரில் ரியான் பர்ல் அடுத்தடுத்து 5 சிக்சர், ஒரு பவுண்டரியை விரட்டி 34 ரன்களைச் சேர்த்தார்.

Advertisement

இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பர்ல் 24 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடி வந்த லுக் ஜொங்வா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடியவந்த ரியான் பர்லும் 54 ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News