Advertisement

இந்திய அணிக்கெதிராக விளையாடுவது என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது - ஆஜாஸ் படேல்!

தான் பிறந்த நாட்டிற்கு எதிராக கிரிக்கெட் விளையாடவுள்ள தருணம் தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக நியூசிலாந்து வீரர் ஆஜாஸ் படேல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 24, 2021 • 16:17 PM
Ajaz Patel on playing the final against India
Ajaz Patel on playing the final against India (Image Source: Google)
Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் ஜூஸ் 18 அன்று நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. 

இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் நியூசிலாந்து வாழ் இந்தியரான ஆஜாஸ் படேல், இந்திய அணிக்கெதிராக களமிறங்கவுள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கெதிராக களமிறங்க உள்ளது குறித்து ஆஜாஸ் படேல் இத்தருணம் தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பேசிய ஆஜாஸ் படேல் “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடுவது எண்ணி நான் மெய்சிலிர்க்கிறேன். நியூசிலாந்தில் குடியேறிய நான் அங்கிருந்துதான் எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினேன். இப்போது கிரிக்கெட்டின் தாய் நாடான இங்கிலாந்தில் நான் பிறந்த நாட்டுடன், எனது தாய் நாடான நியூசிலாந்துக்கு அணிக்காக விளையாடுவது அற்புதமான அனுபவம்” என தெரிவித்துள்ளார். 

Trending


நியூசிலாந்து வாழ் இந்தியரான ஆஜாஸ் படேல் இதுவரை நியூசிலாந்து அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகள், 2 டி20 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement