Advertisement
Advertisement
Advertisement

ஹர்திக் ஏன் ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை? - சேத்தன் சர்மா பதில்!

ஹார்திக் பாண்டியா ரஞ்சி கோப்பையில் விளையாடாதது ஏன் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 19, 2022 • 22:10 PM
Chetan Sharma Prioritizes Ranji Trophy; Says Playing Ranji Is Important To Know 'Match-Readiness'
Chetan Sharma Prioritizes Ranji Trophy; Says Playing Ranji Is Important To Know 'Match-Readiness' (Image Source: Google)
Advertisement

இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது. இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

ரஞ்சி கோப்பையில் ஹார்திக் பாண்டியா விளையாடாதது குறித்து பேசிய அவர் "யாருக்கேனும் விளையாட விருப்பமில்லையென்றால், அதில் தேர்வுக் குழு தலையிட முடியாது. ஹார்திக் பாண்டியா ரஞ்சி கோப்பையில் விளையாடாதது ஏன் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்? ரஞ்சி கோப்பையில் யார் விளையாடுகிறார்கள், யார் செயல்படுகிறார்கள் என்பதை நாங்கள் கவனிக்கிறோம். வீரர்கள் ரஞ்சியில் விளையாடுவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது.

Trending


ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தார். ஆனால், காயங்களுக்குப் பிறகு 100 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருந்தால், பந்துவீசவும் செய்தால், அவரை உடனடியாகக் கருத்தில் கொள்வோம்" என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement