Advertisement

ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல இவரே காரணம் - தீபக் சஹார!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டங்கள் தான் காரணம் என தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 22, 2021 • 15:55 PM
Deepak Chahar Unplugs About Batting, Father As Coach, And The MS Dhoni Impact
Deepak Chahar Unplugs About Batting, Father As Coach, And The MS Dhoni Impact (Image Source: Google)
Advertisement

இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், தீபக் சஹார் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அப்போதே சென்னை சூப்பர் கிங்ஸின் தோனியிடம் இருந்த தாக்கமே சஹாரின் இந்த ஆட்டம் என பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டங்கள் தான் காரணம் என செய்தியாளர்களைச் சந்திப்பின் போது திபக் சஹார் தெரிவித்துள்ளார். 

Trending


இதுகுறித்து பேசிய தீபக் சஹார் "ஆட்டங்களை எம்.எஸ். தோனி முடிக்கும் விதத்தைப் பார்ப்பது மிகப் பெரிய உத்வேகம். நீண்ட நாள்களாக நான் அவரை கவனித்து வருகிறேன். அவர் இன்னிங்ஸை முடிப்பதையே எப்போதும் பார்த்திருக்கிறேன். அவரிடம் பேசும்போது எப்போதுமே ஆட்டத்தை முடிந்தவரை கடைசி வரை எடுத்துச் செல்ல அறிவுறுத்துவார். அனைவருக்கும் வெற்றி பெற வேண்டும். ஆனால், ஆட்டம் கடைசி வரை செல்லும்போது அனைவரும் செயலாற்றுவது விறுவிறுப்பாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

முன்னாள் கேப்டன் தோனி குறித்து தீபக் சஹார் பேசிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement