Advertisement
Advertisement
Advertisement

IND vs SL: ஜூன் 14 முதல் தனிப்படுத்தப்படும் இந்திய அணி!

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி ஜூன் 14 ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 12, 2021 • 12:25 PM
 Dhawan & Co. to start quarantine in Mumbai from June 14
Dhawan & Co. to start quarantine in Mumbai from June 14 (Image Source: Google)
Advertisement

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூலை 13 முதல் 25 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தத்தொடரில் விளையாடப்போகும் வீரரகளின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், துணைக்கேப்டன் ரோகித் ஷர்மாவும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருப்பதால், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினர் ஜூன் 14ஆம் தேதி முதல் மும்பையில் இருக்கும் பிசிசிஐ விடுதியில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கின்றனர். இந்திய அணியினர் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கும் காலங்களில் அவர்களுக்கு மூன்று முறை கெரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

Trending


அதன் பிறகு மும்பையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இந்திய அணியினர் அங்கு 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் அங்கு தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்த பிறகே பயிற்சிகளை தொடங்குவார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement