
ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி உள்ளார். கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த வருடத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை தோனி உறுதி செய்துள்ளார்.
பஞ்சாப்புக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி இன்று விளையாடுகிறது. இப்போட்டியின் டாஸ் நிகழ்வின்போது, அடுத்த ஐபிஎல் சிசனில் கண்டிப்பாக விளையாடுவேன், ஆனால் சிஎஸ்கேவிற்காக விளையாடுவேன என்று தெரியாது என தோனி கூறியுள்ளது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், “அடுத்த வருடம் மஞ்சள் உடையில் நீங்கள் என்னைப் பார்க்கலாம். ஆனால் சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடுவேனா என்று தெரியாது. நிலையில்லாத பல விஷயங்கள் நடக்கவுள்ளன. இரு புதிய அணிகள் வருகின்றன. வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விதிமுறைகள் என்னவென்று தெரியவில்லை. எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைக்கலாம் எனத் தெரியவில்லை. விதிமுறைகள் தெரியாமல் எதுவும் முடிவெடுக்க முடியாது. எனவே அதுவரை காத்திருப்போம். அனைவருக்கும் நல்லதாகவே அமையும் என நம்புவோம்” என்று தெரிவித்தார்.