ஐபிஎல் 2022: மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவேன்; ஆனால் சிஎஸ்கேவிற்கா என்பது தெரியாது - தோனியின் பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்!
ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடினாலும் எந்த அணியில் இடம்பெறுவேன் எனத் தெரியாது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

Dhoni Says That Fans Will See Him In Yellow But Maybe Not As A Player (Image Source: Google)
ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி உள்ளார். கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த வருடத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை தோனி உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அடுத்த வருடம் மஞ்சள் உடையில் நீங்கள் என்னைப் பார்க்கலாம். ஆனால் சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடுவேனா என்று தெரியாது. நிலையில்லாத பல விஷயங்கள் நடக்கவுள்ளன. இரு புதிய அணிகள் வருகின்றன. வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விதிமுறைகள் என்னவென்று தெரியவில்லை. எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைக்கலாம் எனத் தெரியவில்லை. விதிமுறைகள் தெரியாமல் எதுவும் முடிவெடுக்க முடியாது. எனவே அதுவரை காத்திருப்போம். அனைவருக்கும் நல்லதாகவே அமையும் என நம்புவோம்” என்று தெரிவித்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
தோனியின் இந்தப் பதிலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். சமீபத்தில் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா தொடர்பாக இணையம் வழியாக ரசிகர்களுடன் உரையாடினார் தோனி, “என்னுடைய கடைசி ஆட்டத்தில் நான் சிஎஸ்கேவுக்காக விளையாடுவதை ரசிகர்கள் நேரில் காணலாம். எனக்குப் பிரியாவிடை அளிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சென்னைக்கு நாங்கள் வருவோம். அங்கு என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடுவேன். ரசிகர்களை நாங்கள் அங்கு காணலாம்” என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று தோனி கூறிய பதில் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News