
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனும், முன்னணி ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியோடு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தற்போது வெளியேறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியை வெல்ல முக்கிய நபராக திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ் தனி ஒரு ஆளாக இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தார்.
அப்படிப்பட்ட ஒரு மாபெரும் வீரர் நேற்று தனது 31 வது வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் மட்டும்தான் நான் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு கடினமான முடிவாகும். ஏனெனில் ஒரு நாள் போட்டிகளில் என்னுடைய நூறு சதவீத பங்களிப்பை என்னால் அணிக்கு வழங்க முடியவில்லை.
எனவே என்னுடைய இடத்தில் இன்னும் ஒரு தகுதியான நபர் விளையாட ஆசைப்படுகிறேன். ஆனாலும் இந்த ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் எனது முழு பங்களிப்பையும் கொடுத்து விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளதால் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அவர் விளையாட இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.