
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 14வது சீசன் ஐபிஎல் தொடரானது கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, தற்போது மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.
அதன்படி இன்னும் சில வாரங்களில் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், பின் ஆலன் ஆகியோர் இந்த சீசனில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்த ஆர்.சி.பி நிர்வாகம் 3 வீரர்களை தேர்வு செய்து உள்ளது. அதில் அண்மையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரில் தனது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்காவை ஜாம்பாவிற்கு பதிலாக தேர்வு செய்துள்ளது.