
இந்திய அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மேலும் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரரான ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 38 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் ரிங்கு சிங் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ருத்ராஜ் கூறும்பொழுது, “இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங்கில் மிகவும் முதிர்ச்சியை காட்டினார். ரிங்குவின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பது கிடையாது.