Advertisement

இந்த இடத்திற்கு வர எனக்கு நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது - அஷ்வானி குமார்!

இந்த போட்டியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்ததுடன், ஆட்ட நாயகன் விருதைப் பெறுவது எனக்கு ஒரு பெரிய விஷயம் என்று மும்பை இந்தியன்ஸ் வீரர் அஷ்வானி குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்த இடத்திற்கு வர எனக்கு நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது - அஷ்வானி குமார்!
இந்த இடத்திற்கு வர எனக்கு நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது - அஷ்வானி குமார்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 01, 2025 • 01:21 PM

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்றைய தினம் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 01, 2025 • 01:21 PM

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அங்கிரிஷ் ரகுவன்ஷி 26 ரன்களையும், ரமந்தீப் சிங் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

Trending

மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அறிமுக வீரர் அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா 13 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 16 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் ரிக்கெல்டன் 62 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரிலும் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அஷ்வானி குமார் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இந்நிலையில் இப்போட்டிக்கு பின் பேசிய அஷ்வானி குமார், “இந்த போட்டியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்ததுடன், ஆட்ட நாயகன் விருதைப் பெறுவது எனக்கு ஒரு பெரிய விஷயம். எனது சொந்த ஊர் மொஹாலி மாவட்டம். இந்த இடத்திற்கு வர எனக்கு நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது, ஆனால் கடவுளின் கிருபையால் நான் இங்கே இருக்கிறேன். எனக்கு முழு நம்பிக்கை இருந்தது, ஆனால் எந்த ஒரு போட்டிக்கு முன்பும் எப்போதும் பதட்டம் இருக்கும்.

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்பில் நான் சிறப்பாக செயல்பட்டு, எனது வீட்டில் உள்ளர்வளுக்கு பெருமையைத் தேடித்தருவேன்” என்று தெரிவித்துள்ளர். இதுதவிர்த்து முதல் ஐபிஎல் போட்டியிலேயே நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆறாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அஷ்வானி குமார் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement