ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் மகேந்திர சிங் தோனி. அணிக்கு கேப்டன் பொறுப்பு வகித்த ஜடேஜா முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுத் தந்தார். அவரது ஃபார்மும் கேள்விக்குள்ளானது.
இதையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜா மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார்.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இதன் காரணமாக நடப்பு சீசன் முழுவதிலும் அவர் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியானது.
இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மருத்துவ அறிவுறுத்தலின்பேரில் அவர் விலகுவதாக அணி நிர்வாகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now