Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: தந்தை மரணம் காரணமாக நாடு திரும்பும் ரூதர்ஃபோர்ட்!

தந்தை மரணம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்திருந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 23, 2021 • 22:20 PM
IPL 2021: Sherfane Rutherford To Travel Back Home As His Father Passes Away
IPL 2021: Sherfane Rutherford To Travel Back Home As His Father Passes Away (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட். நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் விலகியதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக ரூதர்ஃபேர்டை அந்த அணி ஒப்பந்தம் செய்தது. 

இதையடுத்து சக வீரர்களுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூதர்ஃபோர்ட் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் ரூதர்ஃபோர்டின் தந்தை இன்று காலமானார். இத்தகவலை அறிந்த ரூதர்ஃபோர்ட், பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறி, நாடு திரும்புகிறார்.

Trending


இதுகுறித்து ரூதர்ஃபோர்ட் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “வாழ்க்கையில் மரணம் எப்போதுமே கடினமான ஒன்று, சில சமயங்களில் அது ஏன் நடக்கிறது என்று நான் கேட்கிறேன் ஆனால் கடவுளுக்கு மட்டும் தான் அது தெரியும், ஆனால் என் அப்பா இப்போது என்னை வாழ்நாள் முழுவதும் விட்டுவிட்டார். என் இதயம் உடைந்துவிட்டது, நான் நிச்சயமாக ஒரே மாதிரியாக இல்லை, நாங்கள் நிறைய திட்டங்களை வைத்திருந்தோம். எனது வெற்றியை உங்களுடன் சேர்ந்து கொண்டாட நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. கடவுளே, நீங்கள் என்னை அழைத்துச் செல்ல நான் பிரார்த்திக்கிறேன், என்னால் இதை ஏற்க முடியவில்லை” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இரங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ரூதர்ஃபோர்ட் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement