
IPL 2022: Sourav Ganguly Confirms These 4 Venues To Host The Indian Premier League (Image Source: Google)
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ள ஒட்டுமொத்த வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி 590 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றன.
மேலும் இந்த வீரர்கள் மெகா ஏலாம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடத்தப்படுமா என்ற கேள்வி வலுத்துவருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் இந்தியாவில் தான் நடைபெறுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று தெரிவித்துள்ளார்.