
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ், இங்கிலாந்து, வங்கதேச பங்களாதேஷ் அணிகள் விளையாடினர்.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 181 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஸ்ரீலங்கா அணி 167 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மூலம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில் பாதுகாப்பாக முறையில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு தொடர் தற்பொழுது இந்திய வீரர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் சச்சின் டெண்டுல்கருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை அடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை நடந்தது. அதில் சச்சின் டெண்டுல்கருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து , அவர் தற்பொழுது தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.