Advertisement

இவர்கள் மட்டும் தான் விளையாடுகிறார்களா? - பீட்டர்சன்னில் காட்டமான ட்வீட்!

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்,ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமரிசித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 14, 2021 • 18:09 PM
It's just Root, Anderson playing against visitors at the moment, says Pietersen
It's just Root, Anderson playing against visitors at the moment, says Pietersen (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் மழை காரணமாக டிராவில் முடிந்தது. இருப்பினும் அந்த ஆட்டத்தில் ரூட் முதல் இன்னிங்ஸில் அரைசதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்தார். ஆண்டர்சன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது.

Trending


இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இதிலும், ரூட் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ரோரி பர்ன்ஸ் 49 ரன்கள் சேர்த்தார். 

இந்த நிலையில் ரூட், ஆண்டர்சன் தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என ட்விட்டர் பக்கத்தில் பீட்டர்சன் விமரிசித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே விளையாடி வருகிறார்கள். வேறு யாராவது ஒருவர் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவது அவசியம். விரைவாக திரும்புங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement