
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4அவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 20ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கலே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கொழும்பு அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இதில் நிஷங்கா 2 ரன்களிலுக், பாபர் ஆசாம் 6 ரன்களையும் எடுத்த நிலையில் லஹிரு குமாரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய லஹிரு உதானா 14, நிபுன் தனஞ்செயா 13, நுவனிந்து ஃபெர்னாண்டோ 14, முகமது நவாஸ் 11, இஃப்திகார் அஹ்மது 5, கேப்டன் சமீகா கருணரத்னே 2 ரன்களுக்கும் என வந்த வேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.