Advertisement
Advertisement
Advertisement

வலிமையின் தூணை இழந்துவிட்டேன் - சுரேஷ் ரெய்னா!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது வலிமையின் தூணை இழந்துவிட்டதாக தந்தையின் பிரிவை உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 07, 2022 • 15:23 PM
'No words can describe the pain': Raina mourns his father's demise
'No words can describe the pain': Raina mourns his father's demise (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் நேற்று காலமானார். ராணுவ அதிகாரியான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், திரிலோக்சந்த் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தந்தையை இழந்த சுரேஷ் ரெய்னா அவரது பிரிவை உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending


 

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பதிவில், “தந்தையை இழந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரது மறைவால் எனது வலிமையின் தூணை இழந்துவிட்டேன். அவர் தனது கடைசி மூச்சு வரை உண்மையான போராளியாக இருந்தார். உங்களது ஆன்மா சாந்தியடையட்டும் அப்பா. உங்களை எப்போதும் மிஸ் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement