
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டி-20 போட்டியில் இந்தியா வென்றாலும், ரோஹித் சர்மாவின் அணி பல தவறுகளை செய்தனர். எனினும் டாஸ் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்ததால் இந்திய அணி தப்பியது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்பதால் இந்திய ரசிகர்கள் 2ஆவது டி20 போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியை எளிதில் வெல்ல வாய்ப்பு கிடைத்தும் இந்தியா அதனை டென்சனாக மாற்றியது. அதற்கு காரணம் நடுவரிசையில் களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தான். திறமையான வீரராக அறியப்பட்ட அவர், தமக்கு கேப்டன்ஷிப் கிடைக்கவில்லையே என்று விரக்தியில் இருப்பதை போல் ஆடினார். மேலும் இந்திய வீரர்கள் சிலர் கேட்ச், ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டனர்.இதனை குறிப்பு எடுத்து கொண்ட டிராவிட், குறிப்பிட்ட வீரர்களுக்கு அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது