Advertisement
Advertisement
Advertisement

ரஞ்சி கோப்பை 2022: முச்சதம் விளாசிய சகிபுல் கனிக்கு சச்சின் பாராட்டு!

ரஞ்சி கோப்பைப் போட்டியில் உலக சாதனை படைத்த பிகார் வீரர் சகிபுல் கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Advertisement
Ranji Trophy: Sachin Tendulkar Congratulates Record-Breaker Sakibul Gani
Ranji Trophy: Sachin Tendulkar Congratulates Record-Breaker Sakibul Gani (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 19, 2022 • 03:26 PM

பிளேட் குரூப்பில் பிகார் -  மிசோரம் இடையிலான ரஞ்சி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பிகார் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 19, 2022 • 03:26 PM

நடுவரிசை வீரராகக் களமிறங்கிய 22 வயது சகிபுல் கனி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது அவருடைய அறிமுக முதல்தர ஆட்டம். இந்நிலையில் அறிமுக முதல்தர ஆட்டத்திலேயே முச்சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தி இந்திய கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

Trending

இதற்கு முன்பு, 2018இல் மத்தியப் பிரதேசத்தின் அஜய் ரொஹேரா 267* ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. சகிபுல் கனி, 387 பந்துகளில் 50 பவுண்டரிகளுடன் முச்சதம் அடித்தார். 

405 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 56 பவுண்டரிகள் உள்பட 341 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சகிபுல் கனி.  இந்நிலையில் சகிபுல் கனியைப் பாராட்டியுள்ளர் சச்சின் டெண்டுல்கர். 

இதுகுறித்து சச்சின் தனது ட்விட்டர் பதிவில், “ரஞ்சி கோப்பைப் போட்டியில் அறிமுக ஆட்டத்திலேயே சிறப்பாக விளையாடியதற்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement