
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் வெற்றி பெற்று 4 தோல்வி, ஒரு வெற்றி என புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
சென்னை அணி இனி ப்ளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால் ஒரே வழி தான் உண்டு. அந்த அணிக்கு மீதம் 9 போட்டிகள் உள்ளன. இதில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்புகள் இருக்கும். இல்லையென்றால் சிரமம் தான் என்ற சூழல் உள்ளது. ஆனால் முக்கிய பின்னடைவாக தீபக் சஹார் இல்லாதது உள்ளது.
காலில் காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்த தீபக் சஹாருக்கு, முதுகில் மற்றொரு பிரச்சினை ஏற்பட்டதால் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு மாற்று வீரரை தேடி வருகின்றனர். அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சீனியர் வீரர் இஷாந்த் சர்மாவை குறிவைத்துள்ளனர்.