
இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்ளினில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ய்ஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய திலக் வர்மா ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ருதுராஜுடன் இணைந்த சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். அதன்பின் ஜோஷுவா லிட்டில் வீசிய 11ஆவது ஓவரில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி ஆட்டத்தை மொமண்டத்தை மாற்றினார்.