
உலகக் கோப்பைப் போட்டித் தொடர் முடிந்தபின் இந்தியா வரும் நியூஸிலாந்து அணி நவம்பர் 17ஆம் தேதி முதல் 3 டி20 போட்டித் தொடர், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்தத் தொடருக்கு, இந்திய அணியில் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹி்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், ரோஹித் சர்மாவிடம் தேர்வுக்குழுவினர் கேட்டு ஆலோசித்தபின்புதான் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு எடுக்கிறேன், டி20 போட்டிக்கு தலைமை ஏற்கிறேன் என ரோஹித் சர்மா கூறினால், ரோஹித்திடம் கேப்டன் பதவி தரப்படும்.
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் வெங்கடேஷ் அய்யர், ஆவேஷ் கான், சேத்தன் சக்காரியா ஆகியோரை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.