
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக் - டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டூசென் 8 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 19 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 14 ரன்களிலும், டேவிட் மில்லர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு துணையாக மார்கோ ஜான்செனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்கோ ஜான்சென் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார்.