
Sri Lanka Recalls Three Players Over Covid Bubble Breach (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இலங்கை அணி ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ளதால், ஒருநாள் தொடரையாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கிடையில் இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் பயோ பபுள் பாதுகாப்பு சூழலை விட்டு வெளியேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும், டிக்வெல்லாவும் இருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது.