
ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி உள்ளார். கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த வருடத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை தோனி உறுதி செய்துள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75ஆவது ஆண்டு விழா தொடர்பாக இணையம் வழியாக ரசிகர்களுடன் உரையாடினார் தோனி. அப்போது அவர் சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தான் எனது கடைசி ஐபிஎல் போட்டி நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தோனி,“என்னுடைய கடைசி ஆட்டத்தில் நான் சிஎஸ்கேவுக்காக விளையாடுவதை ரசிகர்கள் நேரில் காணலாம். எனக்குப் பிரியாவிடை அளிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சென்னைக்கு நாங்கள் வருவோம். அங்கு என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடுவேன்.