சென்னை மண்ணில் தான் எனது கடைசி ஆட்டம் - தோனி!
சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தனது கடைசி ஐபிஎல் ஆட்டத்தை விளையாட விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி கூறியுள்ளார்.

VIDEO: Will Dhoni Play The Next Season Of IPL? CSK Captain Speaks On His Farewell Match (Image Source: Google)
ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி உள்ளார். கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த வருடத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை தோனி உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தோனி,“என்னுடைய கடைசி ஆட்டத்தில் நான் சிஎஸ்கேவுக்காக விளையாடுவதை ரசிகர்கள் நேரில் காணலாம். எனக்குப் பிரியாவிடை அளிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சென்னைக்கு நாங்கள் வருவோம். அங்கு என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடுவேன்.
ரசிகர்களை நாங்கள் அங்கு காணலாம். ஆகஸ்ட் 15 சிறந்த நாள் என்பதால் தான் அந்த நாளில் சர்வதேச கிரிக்கெட்டுக்கான ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன்” என்று தெரிவித்தார். Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021 ஐபிஎல் 2021 போட்டியுடன் தோனி ஓய்வு பெற்று விடுவாரா என ரசிகர்கள் சந்தேகத்துடன் இருந்த நிலையில் தோனியின் இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.https://t.co/GlnuitrRjb pic.twitter.com/p3xT35uPfK
— Nischal (@SlowerOne_) October 5, 2021
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News