
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறி அசத்தின.
இத்தொடரின் முதல் அரையிறுதிப்போட்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெறும் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜார்ஜிய பிளிம்மர் மற்றும் சூஸி பேட்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையி, சூஸி பேட்ஸ் 26 ரன்னிலும், அடுத்து களமிறங்கியா அமெலியா கெர் 7 ரன்னிலும் என் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா பிளிம்மரும் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.அதன் பின் இணைந்த கேப்டன் சோஃபி டிவைன் - புரூக் ஹாலிடே ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஹாலிடே 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சோஃபி டிவைனும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார்.