
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி இன்று நடைபெறும், தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீர அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஐக்கிய அரபு அமீரக அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே இடம் பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி என மூவருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் அர்ஷ்தீப் சிங் இந்த போட்டிக்கான லெவனில் இடம்பெறவில்லை.
இந்தியா பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
யுஏஇ பிளேயிங் லெவன்: முஹம்மது வசீம்(கேப்டன்), அலிஷன் ஷராபு, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ஆசிப் கான், ஹர்ஷித் கௌஷிக், ஹைதர் அலி, துருவ் பராஷர், முஹம்மது ரோஹித் கான், ஜுனைத் சித்திக், சிம்ரன்ஜீத் சிங்