வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையும் வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
சில்ஹெட்டில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று முன்னிலையை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, ஹர்மன்பிரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், எஸ். சாஜனா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், ரேணுகா தாக்கூர் சிங்.
வங்கதேச மகளிர் அணி: திலாரா அக்தர், முர்ஷிதா காதுன், சோபானா மோஸ்டரி, நிகர் சுல்தானா (கே), ஃபஹிமா காதுன், ரிது மோனி, நஹிதா அக்தர், ரபேயா கான், சுல்தானா காதுன், மருஃபா அக்டர், ஃபரிஹா த்ரிஸ்னா.