விறுவிறுப்பாக நடபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள 43ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்தாலும், தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.