
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய அணியில் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ள கருண் நாயர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோரும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன் : ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்.
இந்தியா பிளேயிங் லெவன் : கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில்(கேப்டன்), கருண் நாயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.