இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.இதில் கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியா இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதுடன் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அதேசமயம் ஹர்திக் பாண்டியா விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் வகையில் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில்(கே), விருத்திமான் சாஹா, சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா(கே), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, லூக் வுட்.