17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இந்த இரு ஐபிஎல் அணிகளும் இத்தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் நிலையில் நடப்பு சீசனில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் விளையாடவுள்ளனர். மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான்(கே), ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் சர்மா, ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப், ரிஷப் பந்த்(கே), ரிக்கி புய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் சர்மா.