ரஞ்சி கோப்பை வரலாற்றில் சேஸிங்கில் புதிய சாதனை படைத்த ரயில்வேஸ் அணி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த ரயில்வேஸ் - திரிபுரா அணிகள் தங்களது கடைசி லீக் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரயில்வேஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திரிபுரா அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரயில்வேஸ் அணி தரப்பில் யுவ்ராஜ்…
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த ரயில்வேஸ் - திரிபுரா அணிகள் தங்களது கடைசி லீக் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரயில்வேஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திரிபுரா அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரயில்வேஸ் அணி தரப்பில் யுவ்ராஜ் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹிமான்ஷு சங்வான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.