![Rohit Sharma In Tears After India Reach T20 World Cup Final; Virat Kohli Consoles Indian Captain - Watch! வெற்றிக்கு பிறகு கண் கலங்கிய ரோஹித் சர்மா; வைரலாகும் காணொளி!](https://img.cricketnmore.com/uploads/2024/06/Rohit-Sharma-Crying-lg1-lg.jpg)
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தி இந்திய அணியானது 10ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் இந்திய அணியானது ரோஹித் சர்மாவின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்திருந்தது.
அதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ்வின் அபாரமாக பந்து வீச்சின் மூலம் 16.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணியானது கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிபோட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது.
இதையடுத்து இந்திய அணிக்கும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இப்போட்டி முடிவுக்கு பிறகு வீரர்களின் ஓய்வறைக்கு முன்பு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கண்கலங்கியுள்ளார். மேலும் அவருக்கு சக வீரரான விராட் கோலி ஆறுதல் கூறியது போன்ற காணொளியை ஐசிசி வெளியிட்டுள்ளது. தற்போது அக்காணொளியானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.