-lg.jpg)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியிம் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இண்டு நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு, அறிமுக வீரர் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா : கே.எல்.ராகுல்(கே), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
தென் ஆப்பிரிக்கா: டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மகராஜ், நந்த்ரே பர்கர், லிசாத் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்.