ஆட்டநாயகன் விருதை நான் சந்தீப் சர்மாவுக்கு தான் கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கிரிக்கெட்: Tamil Cricket News