The northeast
ஐஎஸ்எல் 2022: முதல் வெற்றியைப் பெற்றது ஈஸ்ட் பெங்கால்!
ஒன்பதாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஈஸ்ட் பெங்கால் அணி தரப்பில் கிளீடன் சில்வா ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அதை தொடர்ந்து அந்த அணியின் கரிஸ் கிரியாகோ 52ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலை அடிக்க, ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் ஜோர்டான் ஈஸ்ட் பெங்கால் அணியின் மூன்றாவது கோலை அடித்தார்.
Advertisement
Related Cricket News on The northeast
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24