Aakash chopra
இப்படி செய்தால் ஆஸி நிச்சயம் 4-0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்ஹிரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்த, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.