Aakash chopra
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி ஓவ்வொரு அணியும் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
கடந்தாண்டு சில ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தடுமாறி வரும் கேகேஆர் அணியானது நடப்பு சீசனில் மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதுடன் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.