Afro asia cup
ஒரே அணியில் கோலி, பாபர் ஆசாம், அஃப்ரிடி; ஆவலுடன் ரசிகர்கள்!
கடந்த 2005 முதல் 2007ஆம் ஆண்டுவரை ‘ஆப்ரோ ஆசிய கோப்பை’ என்ற பெயரில் பிரபல கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து லெவன் அணியில் இடம்பெற்று விளையாடினார்கள். இதனால், உலக அளவில் இத்தொடர் மிகவும் பிரபலாக இருந்தது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், இத்தொடர் அதன்பிறகு நடைபெறவில்லை.
நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் இந்த தொடரை மீண்டும் நடத்த, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி பிரபாகரன், அனைத்து அணிகளுக்கும் ஆப்ரோ ஆசிய கோப்பை தொடர் குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பதிலுக்காக காத்திருப்பதாகவும், பதில் வந்த உடன் இத்தொடர் பிரமாண்டமான அளவில் நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.