Akash kumar choudhary
அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்; உலக சாதனை படைத்த மேகாலய வீரர்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிளேட் பிரிவில் இடம் பிடித்துள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மேகாலயா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மேகாலயா அணிக்கு அர்பித் பத்வரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார்.
மேலும் இப்போட்டியில் 23 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 207 ரன்கள் குவித்த நிலையில் அர்பித் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அஜய் துஹான் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கிஷான் மற்றும் தலால் இணையும் அபாரமாக விளையாடி தங்களுடைய சதங்களைப் பதிவு செய்து அசத்தினர். இதில் கிஷன் 114 ரன்களுக்கும், தலால் 144 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Akash kumar choudhary
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47