Ashish nehra
ஐபிஎல் 2022: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆஷிஸ் நெஹ்ரா
ஐபிஎல் 15ஆவது சீசனின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார், மற்றவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்கவில்லை.