Axar patel
எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன் - அக்ஸர் படேல்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் சற்று பொறுமையாக விளையாடினாலும் இறுதி நேரத்தில் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சாய் ஹோப், தனது 100ஆவது போட்டியில் சதமடித்து அசத்தினார். நடுவரிசையில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 74 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.